மும்பையில் ரூ.23 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களை மும்பை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-22 18:14 GMT

மும்பை,

மும்பையில் உள்ள கோவன்டி என்ற பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து மும்பை போலீசார் அங்கு நடத்திய தீவிர சோதனையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்