மும்பை விமான நிலையத்தில் சோப்பு கட்டிகளில் மறைத்து எடுத்துவரப்பட்ட ரூ.25 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் சோப்பு கட்டிகளில் மறைத்து எடுத்துவரப்பட்ட 25 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-03-01 16:33 GMT

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் சோப்பு கட்டிகளில் மறைத்து எடுத்துவரப்பட்ட 25 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வருவாய்த்துறை புனலாய்வு அதிகாரிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மும்பைக்கு வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

அதில் பயணி ஒருவரிடம் இருந்த சோப்பு கட்டிகளில் கொகைன் மறைத்து எடுத்துவரப்பட்டது தெரிய வந்தது. 2 கிலோ 58 கிராம் எடையிலான கொக்கையினை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்