தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆக குறைந்தது: உயிரிழப்பு இல்லை

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 5 குறைந்தது.

Update: 2023-08-22 22:32 GMT

புதுடெல்லி,

நாட்டில் நேற்று முன்தினம் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 23 ஆக குறைந்தது. இதுவரை கொரோனாவுக்கு ஆளானவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 676 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 28 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 280 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 5 குறைந்தது. மொத்தம் 1,470 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று முன்தினம் தொற்றுக்கு ஒருவர் பலியானார். நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 926 ஆக நீடிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்