சிபிஐ, அமலாக்கத்துறை தேவையற்ற தொல்லைகளை கொடுக்கின்றன : கெஜ்ரிவால் விமர்சனம்

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் தேவையற்ற தொல்லைகளை கொடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

Update: 2022-09-16 08:41 GMT

புதுடெல்லி,

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தேவையின்றி அனைவருக்கும் தொல்லைகள் கொடுப்பதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லி மதுபானக்கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும் பல கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக டெல்லி துணை நிலை கவர்னர், சிபிஐ மற்றும் பாஜக ஆகியவை வெவ்வேறு தொகைகளை கூறி வருகின்றன. ஆனால், உண்மையில் இது என்னவென்றே எனக்கு புரியவில்லை' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்