முதல் மனைவியுடன் திட்டமிட்டு கூலிப்படை வைத்து 2-வது மனைவியை கொன்ற கணவர்

ஜார்க்கண்டில் முதல் மனைவியுடன் திட்டமிட்டு 2-வது மனைவியை ரூ.5 ஆயிரத்திற்கு, கூலிப்படை வைத்து கணவர் கொலை செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

Update: 2023-01-10 09:41 GMT



சாய்பாசா,


ஜார்க்கண்டின் சாய்பாசா நகரில் பசதொந்தோ கிராமத்தில் வசித்து வருபவர் சோக்ரா பன்ரா. இவரது முதல் மனைவி சுனிதா பன்ரா. இந்நிலையில், சோம்வாரி பன்ரா (வயது 28) என்ற பெண்ணை சோக்ரா 2-வது திருமணம் செய்து கொண்டார்.

எனினும், 2-வது மனைவியுடன் சுமுக உறவு நீடிக்கவில்லை. இதுவே தக்க சமயம் என நினைத்த முதல் மனைவி சுனிதா, அவரை கொலை செய்ய கணவருக்கு திட்டம் தீட்டி கொடுத்து உள்ளார்.

இதன்படி, ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்து சோக்ரா கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தி உள்ளார். இதன்பின்பு, முதல் மனைவி திட்டத்தின் உதவியுடன், கூலிப்படையை வைத்து 2-வது மனைவியை சோக்ரா கொலை செய்துள்ளார்.

அவரது உடலை ஆடு மேய்த்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிணறு ஒன்றில் இருந்து உடலை போலீசார் மீட்டுள்ளனர். கூலிப்படையை சேர்ந்த ரவி ரோஷன் பூர்த்தி (வயது 19), கம்லேஷ் பூட்டியா (வயது 21) ஆகிய இருவரை கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கோர்ட்டு உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் சோக்ரா அவரது முதல் மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். சோம்வாரியின் முகம் அடையாளம் தெரியாத வகையில் காணப்பட்டது.

இந்த தம்பதி, சோம்வாரியை கொடுமைப்படுத்தி வந்துள்ளது. சம்பவத்தன்றும், அவரை அடித்து துன்புறுத்தி உள்ளது. போலீசாரின் விசாரணையில் இவை தெரிய வந்தது. விசாரணை முடிவில் குற்ற செயலை அவர்கள் ஒப்பு கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்