தேசியக்கொடியுடன் 7,575 கி.மீ. தூரத்திற்கு பயணித்த இந்தோ-திபெத்திய ராணுவ வீரர்கள்

இம்மாதம் தொடக்கத்தில் லடாக்கின் கரகோரம் கணவாயில் தொடங்கிய வீரர்களின் பேரணி அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் முடிவடைந்தது.

Update: 2022-08-21 13:38 GMT

சிம்லா,

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி லடாக்கில் இந்தோ-திபெத்திய எல்லை வீரர்கள், அம்ரித் மஹோத்சவ பேரணியில் ஈடுபட்டனர். இம்மாதம் தொடக்கத்தில் லடாக்கின் கரகோரம் கணவாயில் தொடங்கிய வீரர்களின் பேரணி அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் முடிவடைந்தது.

கையில் தேசியக்கொடியுடன் சுமார் 7 ஆயிரத்து 575 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட மலைகள், மேடுகள், நீர்நிலைகள் போன்ற ஆபத்தான பாதைகளை கடந்து சென்று தங்கள் பேரணியை வெற்றிகரமாக முடித்த ராணுவ வீரர்கள், தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்