உத்தரப்பிரதேசம்: கரும்புத்தோட்டத்தில் வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம்..!

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி காணாமல் போன இளம்பெண், கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-06-12 14:25 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 18 வயது பெண் ஒருவர் கடந்த 6ஆம் தேதி காணாமல் போன நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பெண்ணை தேடி வந்த நிலையில், அங்குள்ள கரும்புத்தோட்டத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பெண்ணின் செருப்புகள் மற்றும் துணிகளை வைத்து அவரது தந்தை அடையாளம் காட்டினார். பெண்ணின் அடையாளத்தை மறைக்க உடலில் ஆசிட் ஊற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர். மேலும், கொலைக்கு முன்னதாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க சந்தோஷ் வர்மா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்