மது விற்பனையை மேலும் படிப்படியாக குறைப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும் - சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Update: 2023-07-11 16:36 GMT

சென்னை,

இது குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரை மதுக்கடைகளை திறப்பதற்கான ஆலோசனையை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் மனித மூளையை சலவை செய்து, சமூக குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமான மது விற்பனையை மேலும் படிப்படியாக குறைப்பது பற்றி அரசு சிந்தித்து முடிவெடுக்கலாமே தவிர, பொருளாதார தேவைக்காக மக்களின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து மேலும் மது விற்பனையை அதிகரிக்க நேர்ந்தால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்