உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய இணை தங்கப்பதக்கம் வென்றது


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய இணை தங்கப்பதக்கம் வென்றது
x

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிய்ல் ஸ்வப்னில் குசேல்-ஆஷி சோக்சே இணை தங்கப்பதக்கம் வென்றனர்.

பாகு,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்-ஆஷி சோக்சே இணை 16-12 என்ற புள்ளி கணக்கில் உக்ரைனின் செர்ஹி குலிஷ்-டாரியா டைகோவா ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

இந்த போட்டியில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியா 2 தங்கம், 3 வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. தென்கொரியா முதலிடத்தில் இருக்கிறது.


Next Story