புரோ கபடி லீக்: புனேரி பால்டனை வீழ்த்தி யு.பி.யோத்தா வெற்றி


புரோ கபடி லீக்: புனேரி பால்டனை வீழ்த்தி யு.பி.யோத்தா வெற்றி
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் புனேரி பால்டன்-யு.பி.யோத்தா அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதியில் விளையாடும். எஞ்சிய 4 அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் இருந்து 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

நாளையுடன் லீக் சுற்று முடிகிறது. அதனை தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்று 13-ந்தேதியும், அரைஇறுதி ஆட்டங்கள் 15-ந் தேதியும், இறுதிப்போட்டி 17-ந்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி 51-51 என்ற புள்ளி கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

இந்த நிலையில் இதையடுத்து நடந்த 2-வது போட்டியில் புனேரி பால்டன்-யு.பி.யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு.பி.யோத்தா அணி 45-41 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story