புரோ கபடி லீக்: புனேரி பால்டன், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி


புரோ கபடி லீக்: புனேரி பால்டன், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற போட்டிகளில் புனேரி பால்டன், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் அக்டோபர் மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் புனேரி பால்டன்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 44-30 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 44-30 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story