புரோ கபடி லீக்: பாட்னா அணி வெற்றி


புரோ கபடி லீக்: பாட்னா அணி வெற்றி
x

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள்

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதியில் விளையாடும். எஞ்சிய 4 அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் இருந்து 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும். இன்றுடன் லீக் சுற்று முடிகிறது. இதனை தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்று 13-ந்தேதியும், அரைஇறுதி ஆட்டங்கள் 15-ந் தேதியும், இறுதிப்போட்டி 17-ந்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாட்னா அணி 49 -38 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story