புரோ கபடி லீக்: 'பிளே-ஆப்' சுற்றுக்கு டெல்லி அணி தகுதி


புரோ கபடி லீக்: பிளே-ஆப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதி
x

Image Courtesy : @ProKabaddi twitter

தபாங் டெல்லி அணி 63 புள்ளிகளுடன் 6-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 50-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் இடையிலான மற்றொரு பரபரப்பான ஆட்டம் 46-46 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.

தனது கடைசி லீக்கில் ஆடி விட்ட தபாங் டெல்லி அணி 10 வெற்றி, 10 தோல்வி, 2 சமன் என்று 63 புள்ளிகளுடன் 6-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதியில் விளையாடும். எஞ்சிய 4 அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் இருந்து 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

நாளையுடன் லீக் சுற்று முடிகிறது. அதனை தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்று 13-ந்தேதியும், அரைஇறுதி ஆட்டங்கள் 15-ந் தேதியும், இறுதிப்போட்டி 17-ந்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story