புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி


புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 47-43 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆட்ட நேர முடிவில் குஜராத் ஜெயன்ட்ஸ் 30-19 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story