பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை மணிஷா அரையிறுதிக்கு முன்னேற்றம்


பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை மணிஷா அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில்,பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மணிஷா ராம்தாஸ், ஜப்பானின் டொயோடா மோமிகாவை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் ஆதிக்கம் செலுத்திய மணிஷா 21-13, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் சக வீராங்கனை துளசிமதி முருகேசனை மணீஷா ராமதாஸ் சந்திக்க உள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.


Next Story