105 வயதில் 100 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு அசத்திய மூதாட்டி..!!


105 வயதில் 100 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு அசத்திய மூதாட்டி..!!
x

85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்டு ராம்பாய் அசத்தியுள்ளார்.

வதோதரா,

குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்து கொண்டார்.

85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்டு ராம்பாய் அசத்தியுள்ளார். 45.40 வினாடிகளில் 100 மீட்டர் இலக்கை 105 வயதில் எட்டி அவர் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்தினார்.

இது குறித்து அவர் பேசியபோது, "சிறப்பான உணர்வாக உள்ளது. இனி சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகிறேன்" என தெரிவித்தார்.


Next Story