ஐ.எஸ்.எல் கால்பந்து : பீட்டர் ஸ்லிஸ்கோவிக்கை ஒப்பந்தம் செய்தது சென்னையின் எப்.சி அணி


ஐ.எஸ்.எல் கால்பந்து :  பீட்டர் ஸ்லிஸ்கோவிக்கை ஒப்பந்தம் செய்தது சென்னையின் எப்.சி அணி
x

இந்த தகவலை சென்னையின் எப்.சி அணி தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னையின் எப்.சி அணி, அணியை வலுவாக கட்டமைக்க புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த வாரம் அந்த அணி கானா கால்பந்து வீரர் குவமே கரிகாரியை ஒப்பந்தம் செய்தது. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தாய்லாந்து லீக்கில் 29 லீக் ஆட்டங்களில் 13 கோல்கள் அடித்து அசத்தியவர். இந்த நிலையில் தற்போது சென்னை அணி மேலும் ஒரு வெளிநாட்டு வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது.



குரோஷிய வீரர் பீட்டர் ஸ்லிஸ்கோவிக் சென்னை அணிக்காக இந்த சீசனில் விளையாடவுள்ளார். இந்த தகவலை சென்னையின் எப்.சி அணி தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Next Story