பழைய பார்முக்கு திரும்பினார் விராட் கோலி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்


பழைய பார்முக்கு திரும்பினார் விராட் கோலி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்
x

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்ததை, அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

துபாய்,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த தொடர்களில் விளையாடியபோது ரன்குவிக்க முடியாமல் திணறினார். இதனால் பல்வேறு விமர்சனத்துக்கு ஆளானார். எனினும், அவரது ரசிகர்கள் கோலி மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

இந்த நிலையில், ஆசிய கோப்பையில் விளையாடிவரும் விராட்கோலி, ஹாங்காங் மற்றும் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்ததை, அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்றைய போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 60 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் அவுட் ஆனார்.

கோலி அரைசதம் அடித்ததால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள், கிங் இஸ் ஆல்வேய்ஸ் கிங் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரென்ட் செய்தனர். மேலும், போட்டியைக் காண வந்த பாகிஸ்தான் ரசிகை, கோலிக்காகத்தான் வந்துள்ளதாக பதாகையில் குறிப்பிட்டு இருந்தார்.


Next Story