டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்


டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
x
தினத்தந்தி 6 July 2022 3:36 PM GMT (Updated: 6 July 2022 3:37 PM GMT)

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 203ரன்கள் எடுத்தது

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று நடைபெறும் 12-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்கள் கவுசிக் காந்தி 19ரன்களும் ,நாராயண் ஜெகதீசன் 15ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த ராதாகிருஷ்ணன் ,சசி தேவ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.இருவரும் பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர்.

அதிரடியாக விளையாடிய ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்து 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சசி தேவ் பந்துகளில் 35 பந்துகளில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 203ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 204 ரன்கள் இலக்குடன் திருச்சி அணி விளையாடி வருகிறது .


Next Story