டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்குகின்றன

இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் -கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்கிறது


Next Story