டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு...இலங்கை 77 ரன்களில் ஆல் அவுட்


டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு...இலங்கை 77 ரன்களில் ஆல் அவுட்
x

Image Courtesy: AFP

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பதும் நிசாங்கா 3 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 19 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் காமிந்து மெண்டிஸ் 11 ரன், வனிந்து ஹசரங்கா 0 ரன், சதீரா சமரவிக்ரமா 0 ரன், சரித் அசலங்கா 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 45 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து அனுபவ வீரர்களாக ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷனகா 9 ரன்னிலும், மேத்யூஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மகேஷ் தீக்சனா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி ஆட உள்ளது.


Next Story