'சூப்பர் 8' சுற்று: சூர்யகுமார் யாதவ் அரைசதம்...இந்திய அணி 181 ரன்கள் குவிப்பு


சூப்பர் 8 சுற்று: சூர்யகுமார் யாதவ் அரைசதம்...இந்திய அணி 181 ரன்கள் குவிப்பு
x

சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 32ரன்களும் எடுத்தனர்

பிரிஜ்டவுன்,

9-வது டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் 'சூப்பர் 8 ' சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான c ' சூப்பர் 8'சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , விராட் கோலி களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப் பண்ட் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து விராட் கோலி 24 ரன்களுக்கும் , சிவம் துபே 10 ரன்களுக்கும் வெளியேறினர்.

தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் , ஹர்திக் பாண்டியா இருவரும் இணைத்து அதிரடி காட்டினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். சூர்யகுமார் யாதவ் அரைசதமடித்து அசத்தினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது . சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் , பரூக்கி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்


Next Story