டி 20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்; மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது


டி 20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்; மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது
x

மழையால் போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஆனது. பின்னர் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது. இதனால் ஜிம்பாப்வே அணிக்கு 80 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மழை மீண்டும் குறுக்கிட்டதால் தென் ஆப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆனால் மீண்டும் மழை இடையூறு செய்ததால் போட்டி கைவிடப்பட்டது. வெற்றியின் விளிம்பு வரை தென் ஆப்பிரிக்க அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழையால் போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.


Next Story