'பயிற்சி செய்தாலும் டாஸில் வெற்றி பெற முடியவில்லை'- தொடர்ச்சியாக 5-வது டாஸ் இழந்த ரிஷப் பண்ட் பேச்சு


பயிற்சி செய்தாலும் டாஸில் வெற்றி பெற முடியவில்லை- தொடர்ச்சியாக 5-வது டாஸ் இழந்த ரிஷப் பண்ட் பேச்சு
x

Image Courtesy : BCCI  

இதற்கென பயிற்சி செய்தும் டாஸில் வெற்றி பெற முடியவில்லை என ரிஷப் தெரிவித்தார்.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேசவ் மகாராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு டாஸ் கூட வெற்றி பெறாத இந்திய கேப்டன் என்னும் பரிதாபமான சாதனையை படைத்துள்ளார். டாஸ்-யின் போது பேசிய ரிஷப் பண்ட், இதற்கென பயிற்சி செய்தும் டாஸ்-யில் வெற்றி பெற முடியவில்லை என புன்னகையுடன் தெரிவித்தார்.

இந்த போட்டியில் இந்திய அணி 3.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் மீண்டும் போட்டி தடைப்பட்டுள்ளது. களத்தில் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் உள்ளனர். இந்த போட்டி இனி தொடங்கும் பட்சத்தில் ஓவர்கள் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.


Next Story