பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை திடீரென சந்தித்த ரிஷப் பண்ட் - வைரலாகும் வீடியோ


பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை திடீரென சந்தித்த  ரிஷப் பண்ட் - வைரலாகும் வீடியோ
x

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார். பண்ட் அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்து உரையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் வருகிற ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


Next Story