கே.எல்.ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கே.எல்.ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x

கோப்புப்படம்

இந்திய அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற நாளை தொடங்குகிறது. மேலும் முதலாவது டி20 போட்டி வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல். ராகுலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி20 தொடரில் இடம்பெற்றுள்ள அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக காயத்தால் அவதிப்பட்டு வந்த கே.எல்.ராகுலுக்கு சமீபத்தில்தான் ஜெர்மனியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் குணமடைந்து வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி 20 அணியில் ராகுல் இடம் பெறாதபட்சத்தில் இஷான் கிஷான், தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.


Next Story