விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகிறேன் - இர்பான் பதான்


விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகிறேன் - இர்பான் பதான்
x

விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் பார்த்து வருத்தப்படுகிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்,

புதுடெல்லி,

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நாடளுமன்ற திறப்பு விழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயற்சித்தனர்.

ஆனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் பார்த்து வருத்தப்படுகிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்,

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

நம் விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். தயவு செய்து இதை விரைவில் தீர்க்கவும் என தெரிவித்துள்ளார்.


Next Story