இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி மழையால் ரத்து


இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி மழையால் ரத்து
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், டி20, டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பிரிட்ஸ் அதிகபட்சமாக 52 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.


Next Story