இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்


இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்
x
தினத்தந்தி 28 Jun 2022 1:28 PM GMT (Updated: 28 Jun 2022 1:29 PM GMT)

இந்திய அணியில் சில வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது

பர்மிங்காம்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்தில் பொது இடங்களில் சுற்றி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக சில வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் பிசிசிஐ, அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் வீரர்கள் வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விராட் கோலி ,ரிஷப் பண்ட் ஆகியோர் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Next Story