2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது இங்கிலாந்து


2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது இங்கிலாந்து
x

2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை இங்கிலாந்து அணி 83 ரன்னில் சுருட்டியது.

மான்செஸ்டர்,

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 28.1 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் டாப்வரிசை வீரர்களான ஜானிமேன் மலான், வான்டெர் டஸன், மார்க்ராம் ஆகிய 3 பேரும் டக்-அவுட் ஆனார்கள். இந்த வீழ்ச்சியில் இருந்து நிமிர முடியாமல் திண்டாடிய தென்ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்களில் 83 ரன்னில் அடங்கியது.

ஒரு நாள் போட்டியில் அந்த அணியின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டும், மொயீன் அலி, ரீஸ் டாப்லே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.

அடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story