சண்டிமால் இரட்டைசதம்: இலங்கை அணி 554 ரன்களுக்கு ஆல் அவுட்


சண்டிமால் இரட்டைசதம்: இலங்கை அணி 554 ரன்களுக்கு ஆல் அவுட்
x

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

காலே,

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. மெண்டிஸ் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் அரைசதம் கடந்த நிலையில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சண்டிமால் சதம் அடித்து அசத்தினார்.

3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்த நிலையில், இன்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தினேஷ் சண்டிமால் இரட்டைசதம் அடித்து அசத்தினார். அவர் கடைசிவரை களத்தில் நின்ற நிலையில், மறுபுறம் விளையாடிய பேட்ஸ்மேன்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இதனால் இலங்கை அணி 554 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 190 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.


Next Story