உலகக்கோப்பை வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் பும்ரா!


உலகக்கோப்பை வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் பும்ரா!
x

image courtesy; twitter/@BCCI

உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா, கருணாரத்னே இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் பதும் நிசாங்காவின் விக்கெட்டை முதல் ஓவரின் முதல் பந்திலேயே பும்ரா கைப்பற்றினார். இதன் மூலம் 48 ஆண்டு கால உலகக்கோப்பை வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார் பும்ரா.


Next Story