ஐ.பி.எல்.: பெங்களூரு அணி கோப்பையை வெல்லும்- விராட் கோலி நம்பிக்கை


ஐ.பி.எல்.: பெங்களூரு அணி கோப்பையை வெல்லும்- விராட் கோலி நம்பிக்கை
x
தினத்தந்தி 20 March 2024 12:19 AM GMT (Updated: 20 March 2024 12:21 AM GMT)

களத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேசினார்.

பெங்களூரு,

நடந்து முடிந்த பெண்கள் பிரீமியர் லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஆண்கள் பங்கேற்கும் ஐ.பி.எல். தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நட்சத்திர வீரர் விராட் கோலி பேசுகையில், 'பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றதை பார்த்தோம். அந்த கோப்பையை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புகிறேன். அதை செய்தால் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

ஐ.பி.எல். கோப்பையை வென்று, அதை உணர்வுபூர்வமாக அனுபவிக்க வேண்டும் என்பது எனது கனவு. இங்குள்ள அந்த அணி (பெங்களூரு) முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. களத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.


Next Story