ஐசிசியிடம் இருந்து பிசிசிஐ-க்கு ஆண்டுக்கு கிடைக்கும் தொகை இத்தனை கோடியா.. ?


ஐசிசியிடம் இருந்து பிசிசிஐ-க்கு ஆண்டுக்கு  கிடைக்கும் தொகை இத்தனை கோடியா.. ?
x

2024 முதல் 2027 வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அதிக வருவாயை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஈட்டி தருகிறது. அதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருவாயை ஈட்டி கொடுக்கின்றன. இந்த 3 நாடுகளுக்கு ஐ.சி.சி. சமமான அளவில் வருவாயை பகிர்ந்து அளித்து வந்தது. இந்த நிலையில் 2024 முதல் 2027 வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவுக்கு பெரும் அளவில் வருவாய் கிடைக்கிறது. ஐ.சி.சி. வருமானத்தில் இந்தியாதான் மிகப்பெரிய பங்கு வகிப்பதால் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.1,894 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 38.5 சதவீதம் கிடைக்கும். ஐ.சி.சி.யின் ஆண்டு வருமானம் ரூ.4919 கோடியாக இருக் கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.338 கோடி வருவாய் கிடைக்கும். அதாவது ஐ.சி.சி. வருவாயில் 6.89 சத வீதம் கிடைக்கும். இங்கிலாந்தைவிட இந்தியாவுக்கு 6 மடங்கு வருவாய் கிடைக்கிறது.

ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வில் ஆஸ்திரேலியா 3-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டுக்கு ரூ.307 கோடி வருவாய் கிடைக்கும். அதாவது 6.25 சதவீதம் வருமானம் கிடைக்கும். அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.282 கோடி (5.73 சதவீதம்) கிடைக்கும்.

நியூசிலாந்து (4.73 சதவீதம்), வெஸ்ட்இண்டீஸ்,(4.58), இலங்கை, (4.52), வங்காளதேசம் (4.46 ), தென் ஆப்பிரிக்கா (4.37), அயர்லாந்து (3.01), ஜிம்பாம்பே (2.94), ஆப்கானிஸ்தான் (2.94 ) ஆகிய நாடுகளுக்கு முறையே வருமானம் கிடைக்கும். மீதியுள்ள 11.19 சதவீத அசோசியேட் உறுப்பு நாடுகளுக்கு கிடைக்கும்


Next Story