இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற இளம் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ


இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற இளம் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ
x
தினத்தந்தி 1 Jan 2023 12:01 PM GMT (Updated: 1 Jan 2023 12:15 PM GMT)

இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது

மும்பை,

இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.மும்பையில் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தலைமையில் இன்று (ஜனவரி 1) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற வேண்டுமானல் ரஞ்சி, சயீத் முஸ்தாக் அலி, துலிப் கோப்பை போட்டிகளில் விளையாடிய அனுபவம் அதிகம் பெற்றிருக்க வேண்டும் யோ-யோ உள்ளிட்ட பயிற்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் போன்ற புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.



Next Story