3வது ஒருநாள் போட்டி - நெதர்லாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து


3வது ஒருநாள் போட்டி - நெதர்லாந்து அணியை வீழ்த்தி தொடரை   வென்றது இங்கிலாந்து
x

Image Courtesy : ICC 

தினத்தந்தி 23 Jun 2022 2:38 AM GMT (Updated: 23 Jun 2022 2:38 AM GMT)

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது

ஆம்ஸ்டெல்வீன்,

நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதிய 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அந்த அணியில் கேப்டன் எட்வர்ட்ஸ் 64 ரன்களும் ,பாஸ் டி லீட் 56 ரன்களும், மேக்ஸ் ஒடோவ் 50 ரன்களும் எடுத்தனர் .

தொடர்ந்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். ஜோஸ் பட்லர் 86 ரன்கள் எடுத்தார்.இறுதியில், இங்கிலாந்து 30.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது

இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.


Next Story