ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட்; முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு...!


ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட்; முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு...!
x

image courtesy; twitter/ @TheRealPCB

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மெல்போர்ன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 42.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்னஸ் லாபுசாக்னே 14 ரன்களிலும், சுமித் 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.


Next Story