23 நாட்கள் சைக்கிள் பயணம்... சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் செயலால் பரபரப்பு


23 நாட்கள் சைக்கிள் பயணம்... சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் செயலால் பரபரப்பு
x

தோனியின் தீவிர ரசிகரான கவுரவ், தோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சைக்கிளில் 23 நாட்கள் பயணித்து சென்னை வந்துள்ளார்.

சென்னை,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண, டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞர் கவுரவ், எம்.எஸ். தோனியை நேரில் சந்தித்த பிறகே, டெல்லி செல்வேன் என்று கூறி சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே தங்கி உள்ளார்.

தோனியின் தீவிர ரசிகரான இவர் தோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சைக்கிளில் 23 நாட்கள் பயணித்து சென்னை வந்துள்ளார். நண்பர்கள் வழங்கிய டிக்கெட் மூலம் ராஜஸ்தான் ராயல்சுடன் சென்னை அணி மோதிய போட்டியை கண்ட அவர், மீண்டும் டெல்லி திரும்பாமல் தோனியை நேரில் சந்தித்த பிறகே டெல்லி திரும்புவேன் என்று கூறி சேப்பாக்கம் மைதானத்தின் 9-வது கேட் நுழைவு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளார். தோனி ரசிகரின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story