உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி: அதிபர் புதின் அறிவிப்பு!


உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி: அதிபர் புதின் அறிவிப்பு!
x

உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையை ரஷிய அதிபர் புதின் பிறப்பித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையை ரஷிய அதிபர் புதின் பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையில் இன்று அவர் கையெழுத்திட்டார். ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷியாவிற்கு வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

கடந்த பிப்ரவரி 18 முதல் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கு 10,000 ரூபிள் (170 டாலர்கள்) மாதாந்திர ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் பிப்ரவரியில் ரஷியாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்ட ரஷிய ஆதரவு பிராந்தியங்களான சுய ஆட்சி நடைபெறும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியிலிருந்து வருவோருக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

பிப்ரவரி 18 அன்று, டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் இருந்து ரஷியாவிற்கு வந்த ஒவ்வொரு நபருக்கும் 10,000 ரூபிள் செலுத்துமாறு புதின் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது. உக்ரைனும் அமெரிக்காவும் உக்ரைன் எல்லையை ரஷியாவுடன் இணைக்கும் ரஷியாவின் நடவடிக்கைகளை சட்டவிரோத முயற்சி என்று கூறுகின்றன.

உக்ரைனில் ரஷிய ராணுவம் 6 மாதங்களை கடந்து சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story