வான்பாதுகாப்பு ஏவுகணை உள்பட உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா


வான்பாதுகாப்பு ஏவுகணை உள்பட உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
x

Image Courtesy: AFP

அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கா வழங்க உள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 301-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு அதிநவீன 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

300 நாட்களுக்கு மேல் போர் நீடித்து வரும் நிலையில் ரஷியா - உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த உலகின் பல நாடுகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து வருகின்றன. போர் தொடர்ந்து நீடித்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Next Story