6வது மாதத்தில் நுழையும் உக்ரைன் போர் - இதுவரை 1.50 கோடி பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்


6வது மாதத்தில் நுழையும் உக்ரைன் போர் - இதுவரை 1.50 கோடி பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்
x

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 6 ஆவது மாதமாக நீடித்து வருகிறது.

கீவ்,

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு தொடர்ந்து ஆறாவது மாதமாக நீடித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த படையெடுப்பில் இதுவரை ஆயிரக்கரணக்கானோர் கொல்லப்பட்டதுடன், பல லட்சக்கணக்கானோர் உக்ரைனை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள், உக்ரைனின் அடையாளத்தை அழிப்பதற்கான ஆக்கிரமிப்பு போர் என்று கருத்து தெரிவித்து உள்ளன. இதுவரை உக்ரைனில் இருந்து 1.50 கோடி பேர் எல்லையை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.


Next Story