ஈரானில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம்


ஈரானில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம்
x

ஈரானில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் எற்பட்டது.

டெஹ்ரான்,

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிஷ் தீவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கங்கள் தாக்கின. இவை அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகின. அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்கள் கிஷ் தீவை கடுமையாக உலுக்கின. வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. இதனிடையே பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள துபாய், கத்தார் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story