பெட்ரோல் பங்கில் பயங்கர வெடிவிபத்து - 10 பேர் பலி
பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
டுப்லின்,
அயர்லாந்து நாட்டின் டொனிகல் மாகாணம் கிரீஸ்லொக் என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் இன்று மாலை 3 மணியளவில் பெட்ரோல் நிரப்ப வாகனங்கள் சில நின்றன.
அப்போது, அந்த பெட்ரோல் பங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பெட்ரோல் பங்கின் பெரும் பகுதி சேதமடைந்தது.
இந்த கோர வெடிவிபத்தில் குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் பங்கில் வெடிவிபத்து எவ்வாறு ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story