தொடர் ஏவுகணை, பீரங்கி தாக்குதலில் ஈடுபடும் வடகொரியாவை கடுமையாக சாடிய தென்கொரியா


தொடர் ஏவுகணை, பீரங்கி தாக்குதலில் ஈடுபடும் வடகொரியாவை கடுமையாக சாடிய தென்கொரியா
x

வடகொரியா, அதன் கிழக்கு, மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தக்குதல்களை நடத்தியுள்ளது.

சியோல்,

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும், வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்திவரும் வடகொரியா, அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதற்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை, 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என்று தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"வட கொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்கள்" என்றும் கூறியது. இந்த சம்பவம் குறித்து வடகொரிய அரசு ஊடகம் உடனடியாக செய்தி வெளியிடவில்லை.


Next Story