உக்ரைனின் டிரோன் தாக்குதலை முறியடித்த ரஷியா
கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷியா-உக்ரைன் போரானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் 18 மாதங்களை தாண்டியும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சமீப காலமாக இரு தரப்பினரும் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்துகின்றனர். அதன்படி ரஷியாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. முன்னதாக கிரீமியா அருகே உள்ள கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story