அமைதி பேச்சுவார்த்தைக்கு 'முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள்' - ரஷிய வெளியுறவுத்துறை ஆலோசகர்


அமைதி பேச்சுவார்த்தைக்கு முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் - ரஷிய வெளியுறவுத்துறை ஆலோசகர்
x
தினத்தந்தி 12 Oct 2022 4:07 PM GMT (Updated: 12 Oct 2022 4:15 PM GMT)

அமைதி பேச்சுவார்த்தைக்கு முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் என்று ரஷிய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 231-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று உக்ரைன் அதிபர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷிய அதிபர் புதினுடன் அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசப்போவதில்லை என தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதிலளித்த ரஷிய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர், முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் என ஜெலன்ஸ்கியிடம் நான் கூற விரும்புகிறேன்' என்றார்.


Next Story