காசா மீது அணு குண்டு வீச வாய்ப்புள்ளதாக கூறிய இஸ்ரேல் அமைச்சர் சஸ்பெண்ட்: நெதன்யாகு நடவடிக்கை


காசா மீது அணு குண்டு வீச வாய்ப்புள்ளதாக கூறிய இஸ்ரேல் அமைச்சர் சஸ்பெண்ட்: நெதன்யாகு நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2023 3:03 PM GMT (Updated: 6 Nov 2023 7:11 AM GMT)

காசா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் இஸ்ரேல் அமைச்சர் கூறினார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நெருங்கிவிட்ட நிலையில், இந்த போரில் இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் காசாவின் 9,500க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் கலாச்சாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூ என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். "காசா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும்" என தெரிவித்திருந்தார்.

அவரது பேச்சுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அணு ஆயுத மிரட்டலை அடுத்து இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நெருக்கடி அதிகரித்ததில், கலாச்சாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூவை அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் பேச்சு உண்மைக்கு புறம்பாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச சட்டத்தின்படி செயல்படுகின்றன. நாங்கள் வெற்றி பெறும் வரை இதனைத் தொடர்வோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story