இந்திய நீர்மூழ்கி கப்பல் 'ஐ.என்.எஸ். சிந்துகேசரி' இந்தோனேசியாவில் நிறுத்தம்


இந்திய நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். சிந்துகேசரி இந்தோனேசியாவில் நிறுத்தம்
x

இந்தியா தனது ‘ஐ.என்.எஸ். சிந்துகேசரி’ நீர்மூழ்கி கப்பலை இந்தோனேசியாவில் நிறுத்தியுள்ளது.

ஜகார்ட்டா,

தென் சீன கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் மோதல் இருந்து வருகிறது. அதே சமயம் இந்தியாவும், இந்தோனேசியாவும் தங்கள் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஆசிய நாடுகளுக்கான ஒட்டுமொத்த ராஜதந்திர ராணுவ நடவடிக்கையில் ஒரு பகுதியாக இந்தியா தனது 'ஐ.என்.எஸ். சிந்துகேசரி' நீர்மூழ்கி கப்பலை இந்தோனேசியாவில் நிறுத்தியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பலானது நேற்று முன்தினம் சுந்தா ஜலசந்தி வழியாக சென்று ஜகார்த்தாவை அடைந்தது.

ஆசிய நாடுகளுடன் போர் பயிற்சிகள், பரிமாற்றங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை இயக்குவதற்கான பயிற்சி திட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் ஆயுதங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு முடிவுகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story