உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வருகிறார்..!


உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வருகிறார்..!
x

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வருகிறார்.

கீவ்,

உக்ரைன்-ரஷியா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் இவர் பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, "ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும்" என கோரிக்கை வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


Next Story