சூடான் ராணுவ மோதல்: பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு


சூடான் ராணுவ மோதல்: பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு
x

சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ மோதலில் பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது.

கார்டூம்,

சூடான் நாட்டில் கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. துணை ராணுவத்தின் தளபதி ஜெனரல் முகமது ஹம்டனுடன் இந்த அதிவிரைவு ஆதரவு படையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், ராணுவத்திற்கும் - துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்படது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.

இந்த மோதலால் தலைநகர் ஹர்டோமில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ராணுவம் - துணை ராணுவம் இடையே 72 மணி நேரத்திற்கு சண்டை நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


Next Story